சிறுவர் ஊழியங்கள்

உங்கள் குழந்தைகள் ஏதாவது செய்ய செலவிடும் நேரத்தை எப்பொழுதாவது நீங்கள் கவனித்தது உண்டா?

பியானோ (இசைக்கருவி) பழகுவதற்கும், தொலைக்காட்சி பார்ப்பதற்கும், வீடியோ விளையாட்டு விளையாடுவதற்கும் மற்றும் உடற்பயிற்சி போன்ற பல விதங்களில் நமது குழந்தைகள் செலவிடும் நேரத்தை பெற்றோர்களாகிய நாம் நிமிடங்களிலும் மேலும் மணிக்கணக்கிலும் கணக்கிட வேண்டும்.

குழந்தைகளின் ஆலய வருகை, அவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. ஆராய்ச்சி ஒரு புறம் இருந்தாலும் பெற்றோர்களிடம் கேட்டாலே தெரியும், பெரியவர்கள், திருச்சபைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கும், தாங்கள் ஆரம்ப காலத்தில் வராமல் தடை பட்டவர்களுக்கும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி சொல்ல கர்த்தரிடம் சில விஷயங்கள் உண்டு. இதை அவர்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது அவர்களின் பொறுப்பு. மேலும் குழந்தைகளுக்கு சில உதவியும் தேவை என அறியவும்.



முதன் முறையாக பெத்தேல் சிட்டியில் இருக்கும் போது என்ன எதிர்பார்க்க வேண்டும்?

பெற்றோர்கள் அந்த வாரத்திற்கான மன்னாவினால் நிரப்பப்பட வேண்டும். அவர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதைப் பற்றி ஆண்டவர் என்ன சொல்லப் போகிறார் என்பதில் கவனம் செலுத்த அவர்களுக்கு சுமார் 120 நிமிடங்கள் தேவை. ஆண்டவரை வழிபட அவர்களுக்கு நேரம் தேவை. மேலும் அவர்கள் குழந்தைகளும் அதையே பெற விரும்புகின்றனர். 4 முதல் 13 வயது வரை உள்ளவர்களுக்கு ஞாயிறு பள்ளி ஊழியம் நடைபெறுகிறது.


நாம் என்ன கற்பிக்கிறோம்.

குழந்தைகளுக்கே உரிய முறையின் படி விசேஷித்த விதமாக கர்த்தரை அனுபவிக்க பெத்தேல் சிட்டி வழி வகுக்கிறது. குழந்தைகள் அவர்களுக்கே உரிதான வழிபாட்டு முறைகள் அவர்களை நோக்கி கிடைக்கப் பெறுகின்றனர். குழந்தைகள் ஆண்டவரைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையில் அவரின் திட்டங்களைப் பற்றியும், விருப்பமான முறையில் உள்சார்ந்த விளையாட்டுகள் மற்றும் படிப்புத் திட்டங்கள் மூலம் படிக்கின்றனர். ஞாயிறு காலை எல்லா பொது ஆராதனைகளிலும் குழந்தைகளின் திருச்சபை நடைபெறுகிறது. தேவன் கொடுத்த தாலந்துகளை நாடகம், கலை மற்றும் பாடல் மூலம் வெளிப்படுத்த கற்றுக்கொடுக்கப்படுகிறது. குழந்தைகளை அழைத்து வாருங்கள் அவர்கள் முற்றிலும் புதிய முறையில் கடவுளை அனுபவிக்க வழிவகுப்போம்.


எதை எதிர்பார்ப்பது.

பெரிய குழு வழிபாடு
எப்பொழுது நாம் கர்த்தரை பற்றி சரியானவைகளை சொல்லி, மேலும் நாம் அவரிடம் எவ்வளவு அன்பு செய்கிறோம் என்று சொல்கிறோமோ அப்பொழுது நாம் அவரை ஆவியிலும் உண்மையிலும் தொழுகிறோம் என்று பொருள். அது கர்த்தரை மகிழ்விக்கிறது. நமது குழந்தைகள் சத்தமாக பாடி, ஆடி ஆராதிப்பதை நாம் விரும்புகிறோம் அப்பொழுது அவர்களை நாம் அன்பு செய்கிறோம். அவர்கள் கண்களை மூடி, கரங்களை உயர்த்தி, அமைதியாகப் பாடுவது இரண்டுமே தேவனுக்குப் பிடித்தமானவை. மேலும் இரண்டு விதமான வழிபாட்டு முறைகளுமே இயேசு கிறிஸ்துவை இராஜாவாக அறிவிக்கிறது.

பெரிய குழு கற்பித்தல்
தேவனுடைய வார்த்தை தைரியமாகவும் சரியாகவும் கற்பிக்கப்படவேண்டுமென நம்புகிறோம். ஓவ்வொரு வாரமும் முன்னணி ஆசிரியர்கள் தங்கள் வேதாகமத்தைத் திறந்து குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் வல்லமையுடன் கற்பிக்கின்றனர். குழந்தைகள் பல வழிகளில் கற்கின்றனர். குழந்தைகள் எப்படி பயிலுகின்றார்கள் என்பதைப் பற்றி நமக்கு தெரிந்தவைகளை வைத்து சுவிசேஷத்தின் உண்மையை கற்பிக்கின்றோம். குழந்தைகள் எப்பொழுதும் வேதாகமத்தின் மேல் சோர்வு அடைந்து விடக்கூடாது என்பதை அழுத்தமாக நம்புகிறோம். அது நடைபெறாமல் இருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.
குழந்தைகள் ஊழியம் பற்றி உங்களுக்கு ஏதாகிலும் கேள்விகள் இருந்தால், வார இறுதி ஆராதனையில் ஊழியத் தலைவரிடம் பேசலாம். குழந்தை ஊழியரை தொடர்பு கொள்ளவும்.


ஊழியம் செய்ய விருப்பமா?

வார இறுதியில் கிறிஸ்துவுக்காக உழைக்க தன்னார்வ தொண்டர்களை நாங்கள் ஒழுங்கு செய்கிறோம். அந்த நாளில் இயேசுவின் அன்பை குழந்தைகளுக்கு போதிக்க முன் வாருங்கள். எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் info@bethelcitycathedral.com